காசா நுஸ்ரத் அகதி முகாம் மீது இஸ்ரேல் படை தாக்குதல் - ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Dec 30, 2023, 10:45:08 AM
Gaaza நுஸ்ரத் அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் மரணமான அல்-குட்ஸ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் செப்ர் அபு ஹாட்ரூசின் நல்லடக்கம் எல்-பாலாவில்இடம்பெற்றது.அவரது இறுதிச் சடங்கின் போது அவரது உடை மற்றும் ஒலிவாங்கி என்பன அங்கு வைக்கப்பட்டிருந்ததை கான முடிந்தது.
அல்-குத்ஸ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் செப்ர் அப ஹாட்ரூஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த தாக்குதலின் போது உயிரிழ ந்தனார்.
உறவினர்கள் மற்றும் சகாக்கள் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.
அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இறந்த அல்-குட்ஸ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் செப்ர் அபு ஹாட்ரூசின் உடல் மூடப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய படைகள் மேற் கொண்டுவரும் தாக்குதள்களினால் 100 க்கும் மேற்பட்ட ஊடகவியலார்கள் மற்றும் 21000 க்கும் அதிகமான பொது மக்களும் கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.