குரங்கிடமிருந்து வாழைக்குலையை காப்பாற்ற தொடுக்க பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் பலி
பதுளை - ராமு தனராஜா
UPDATED: Mar 30, 2024, 12:26:34 PM
குரங்கிடமிருந்து வாழைக்குலையை காப்பாற்ற தொடுக்க பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
Also Read : நிகழ் நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான திறந்த கலந்துரையாடல்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் வாழை மரத்தில் உள்ள வாழைக்குலையை குரங்கிடமிருந்து காப்பாற்ற வாழை மரம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை கழற்ற முற்பட்ட போது மின்சாரம் தாக்கி அவ்விடத்திலேயே சுமார் ஒரு மணி நேரம் கிடந்துள்ளதாகவும் பின்னர் குறித்த நபர் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் சென்று பார்த்த போது குறித்த நபர் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
Also Read : கல்முனை மாநகர சபை நிதி உதவியாளராக இஸ்ஹாக் நியமனம்
பின்னர் குறித்த நபரை மீகா கியூல வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்த நபர் 67 வயதுடைய எக்கிரிய பகுதியை சேர்ந்தவர் எனவும் தற்போது சடலம் மீகாகியூல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
Also Read : முல்லை மாவட்ட இந்துபுரம் பீனிக்ஸ் விளையாட்டு கழகம் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி - 2024