- முகப்பு
- குறுஞ்செய்திகள்
- அக்குறனை பிரதேச சபை நிர்வாகத்திற்குஎதிராக ஆர்ப்பாட்டம்
அக்குறனை பிரதேச சபை நிர்வாகத்திற்குஎதிராக ஆர்ப்பாட்டம்
(ஜே.எம். ஹாபீஸ்)
அக்குறணை பிரதேச சபை அதிகாரிகள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் பொது விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை எனத் தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
நீர் வழங்கல் வேலைத் திட்டம் காரணமாக நான்கு வருடங்களுக்கு முன் வெட்டப்பட்ட பட்ட பாதைகள் சீர் செய்யப்படாமை, கழிவகற்றல் குறைபாடுகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பொது மக்கள் பதாதைகளை ஏந்திக் கொண்டும் கோசம் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பில் பிரதேச சபை செயலாளருக்கு கோரிக்கை ஒன்றும் சமர்பிக்கப்பட்டது.