• முகப்பு
  • சினிமா
  • ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி.

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி.

தீபக்

UPDATED: Apr 24, 2024, 6:54:49 PM

சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம்ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கேகே நகர் பகுதியைச்சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.

ஜெயம்ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா, ஜெயம்ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். 

தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம்ரவி, ராஜாவின் வீட்டுக்குச்சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவரின் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

 

VIDEOS

Recommended