- முகப்பு
- குறுஞ்செய்திகள்
- மோதல் தொடர்பாக பக்க சார்பற்ற நேர்மையான விசாரணை உறுதி
மோதல் தொடர்பாக பக்க சார்பற்ற நேர்மையான விசாரணை உறுதி
(.ஜேஎம். ஹாபீஸ் )
கண்டி, மெனிக்கின்ன ஆதார வைத்திய சாலையில் சிகிட்சைக்காக அழைத்து வந்த நோயாளர் தரப்பிற்கும், வைத்தியசாலை தரப்பிற்கும் இடையே இடம் பெற்ற மோதல் தொடர்பாக பக்க சார்பற்ற நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
மேற்படி சம்பவத்தில் 7 பேர் இருதரப்பிலும் காயமடைந்து கண்டி தேசிய வைத்திய சாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் போது வைத்திய சாலைதரப்பினர் கடமை நேரத்தில் போதையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் மேற்படி உத்தரவை வழங்கியுள்ளார். சுகாதார பிரிவிற்கும், பொலீசாருக்கும் மேற்படி உத்தரவை ஆளுநர் வழங்கியுள்ளதாக ஆளுநர் காரியாலயம் தெரிவிக்கிறது.