பழக்கடை போல் காட்சியளித்த அதிமுக சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்.

சுந்தர்

UPDATED: Apr 25, 2024, 3:11:16 PM

ADMK News Today

கோடை வெயிலை முன்னிட்டு அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் ஏசுபாதம் தலைமையில் நடைபெற்றது.

கொளப்பாக்கம் ஊராட்சியில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தர்பூசணி, பப்பாளி, நுங்கு, வெள்ளரி, இளநீர் என குளிர்ச்சியூட்டும் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் மோர், ரஸ்னா உள்ளிட்ட குளிர்ச்சியூட்டும் பானங்களும் வழங்கப்பட்டது

இதையடுத்து மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.

தண்ணீர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு தண்ணீர் பந்தல் முழுவதும் பழங்கள் நிறைந்து பழக்கடை போல் காட்சியளித்தது

மேலும் அங்கிருந்த அதிமுக பிரமுகர் ஒருவர் எம்ஜிஆரை போல் தொப்பி, கண்ணாடி அணிந்து கொண்டு இரட்டை இலை சின்னத்தை காண்பித்து எம்ஜிஆரின் சிலையை போல் நின்றது அங்கிருந்த அதிமுக தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது.