மாற்றுத்திறனாளியிடம் ஸ்கூட்டர் வழங்க ரூ2000 லஞ்சம் வாங்கிய மாற்றுத்திறனாளிகள் அலுவலக ஊழியர் பிரபு.
மாரியப்பன்
UPDATED: Mar 12, 2024, 7:20:59 PM
பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளத்தை சேர்ந்தவர் ரவி.மாற்றுத்திறனாளியான இவர் ஸ்கூட்டர் கேட்டு பெரம்பலூர் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து ஸ்கூட்டர் வழங்குவதற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரபு என்பவர் ரூ2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
Also Watch : இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளை செயல் இழக்க வைக்கும் அக்னி 5
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி ரவி,ரசாயணம் தடவிய நோட்டுகளுடன் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சென்று மாற்றுத்திறனாளிகள் அலுவலக ஊழியர் பிரபுவிடம் லஞ்சம் கொடுத்துள்ளார்.
Also Read : தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீஸார் திடிரென மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலக ஊழியர் பிரபுவை கையும் களவுமாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரபு அரியலுர் மாவட்டம் குறிச்சி பகுதியை சார்ந்தவர் என்றும் தஞ்சாவூரில் பணிபுரிந்து அண்மையில்தான் பெரம்பலூருக்கு மாற்றலாகி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Also Read : அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி கள நிலவரம்
ரூ2000 லஞ்சம் வாங்கிய பிரபு கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பிற அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.