• முகப்பு
  • லஞ்சம்
  • 2005ல் வழக்குப் பதியாமல் இருப்பதற்காக லஞ்சம் கேட்ட வனச்சரகர் உட்பட இரண்டு பேருக்கு 18 வருடம் கழித்து 3 ஆண்டு சிறை

2005ல் வழக்குப் பதியாமல் இருப்பதற்காக லஞ்சம் கேட்ட வனச்சரகர் உட்பட இரண்டு பேருக்கு 18 வருடம் கழித்து 3 ஆண்டு சிறை

JK 

UPDATED: Mar 29, 2024, 11:21:18 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சடையம்பட்டியைச் சோந்தவா் வீரப்பன். விவசாயியான இவரது, உறவினரான முத்து என்பவா் கடந்த 2005-ஆம் ஆண்டில் தனது நிலத்திலிருந்த தேக்கு மரத்தை வெட்டிய குற்றத்துக்காக வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

அப்போது, முத்து மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.3ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என மணப்பாறை வனச்சரகத்தில் அப்போது பணிபுரிந்த வனச்சரகா் ஜானகிராமன், வனப்பாதுகாவலா் ராமலிங்கம் ஆகிய இருவரும் கூறியுள்ளனா்.

Also Watch : நீங்கள் இது ஜனநாயக நாடு என்று நினைத்தாள் நான் ஒன்னும் பண்ண முடியாது - சீமான்

லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்து, இதுகுறித்து வீரப்பனிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து வனச்சரகா் ஜானகிராமன் மற்றும் வனப்பாதுகாவலா் ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறையில் வீரப்பன் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், அப்போதைய திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.சுரேஷ்குமாா், ஆய்வாளா் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது குழுவினா் ஆலோசனையின் பேரில், வனச்சரகா் ஜானகிராமன் மற்றும் வனப்பாதுகாவலா் ராமலிங்கத்திடம், வீரப்பன் ரூ.3ஆயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்தபோது கையும் களவுமாக பிடித்தனா்.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

இதையடுத்து இருவா் மீதும் திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று தீா்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ஜானகிராமன், ராமலிங்கம் ஆகிய இருவருக்கும் தலா 3ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மேலும், தலா ரூ.20ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6மாத கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

Also Watch : தனது கட்சியின் சின்னத்தையே மறந்து கை சின்னத்தில் ஓட்டு கேட்ட ஜிகே வாசன்

இருவரும் பணி ஓய்வு பெற்று விட்ட நிலையில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIDEOS

Recommended