• முகப்பு
  • விளையாட்டு
  • ஏறாவூர் ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு நிகழ்வு

ஏறாவூர் ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு நிகழ்வு

உமர் அறபாத் - ஏறாவூர்

UPDATED: Apr 15, 2024, 7:40:34 PM

ஏறாவூர் ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஜனரஞ்சக விளையாட்டு நிகழ்வு மட் / ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் சங்கத்தின் தலைவர் யூ.எல்.சுபைதீன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அம்பாறை ,மட்டக்களப்பு, மற்றும் 

திருகோணமலை மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்


மட்டு.பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான செய்யித் அலிஷாஹிர் மௌலானா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ஏனைய கௌரவ அதிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளான தேசிக்காய் சமநிலை ஓட்டம்,சாயப்பானை உடைத்தல், சாக்கோட்டம்,


யானைக்கு கண் வைத்தல்,மெதுவான துவிச்சக்கர வண்டி ஓட்டம் ,மோட்டார் சைக்கிள் சங்கீத கதிரை,வினோத உடை என பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன் ஏறாவூர் மண்ணில் மூன்றாவது முறையாக இவ் ஜனரஞ்சக விளையாட்டு நிகழ்வு ஏறாவூர் ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended