பத்தாம வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கற்பமாக்கிய வாலிபர்.
செந்தில் முருகன்
UPDATED: Apr 11, 2024, 6:23:49 AM
மயிலாடுதுறை 10.04.2024
பத்தாம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த சிறுமி ஒன்றரை மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளயர் ராதாபாய் மற்றும் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மயிலாடுதுறை அருகே மணல்மேடு பாக்கம் கீழத்தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் குட்டி என்கிற சுதாகர் (வயது 21) என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காராம் செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா மற்றும் மகளிர் போலீசார் வாலிபர் சுதாகரை கைது செய்து நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சுதாகரை நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.