திருகோணமலை நாமகள் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள்

ஏ. எம். கீத்

UPDATED: Apr 11, 2024, 9:18:19 AM

திருகோணமலை வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/நாமகள் பாடசாலையின் தரம் 1க்கான மாணவர்களின் வருகையில் பல வருடங்களாக வீழ்ச்சி கண்டுள்ளமையால் சமூக ஆர்வலர் இராஜகோன் பிரதீபன் அவர்களினால் குறித்த பாடசாலைக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.

அத்துடன் 2023ம் ஆண்டில் இருந்து முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்க்கும் நோக்கத்துடன் கல்விக்கான ஊக்குவிப்புத் தொகையாக ரூபா 100000.00 வழங்கப்பட்டு வருவதுடன் இவ் ஆண்டில் (2024) 07 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் மொத்தமாக ஏழு இலட்சம் வங்கி கணக்குகளில் பணம் ராஜகோபன் பிரதீபன் அவர்களினால் வைப்பிலிடப்பட்டுள்ளது.அதே வேளை வீ. செல்வராசா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் இன்று திருக்கடலூர் நா மகள் வித்யாலயத்தில் இடம்பெற்றது.

VIDEOS

Recommended