பதுரியாவில் அரசாங்கத்தின் இலவச சத்துணவு திட்டம்

பாரா தாஹீர்

UPDATED: Apr 29, 2024, 2:30:26 PM

ஆரோக்கியமும், சுறுசுறுப்புமுள்ள தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் , பாடசாலை மாணவர்களுக்கான இலவச சத்துணவுத்திட்டத்தின் கீழ் பதுரியா மத்திய கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான காலைஉணவு வழங்கும் நிகழ்வு இக் கல்லூரியின் அதிபர் ஏ .எல். ஏ ரஹ்மான் அவர்களின் தலைமையில் இன்று காலை கல்லூரியில் நடைபெற்றது. 

 மாணவர்கள் தொகை குறைந்த பாடசாலைகளில் ஏற்கனவே இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

நிலையில் மாணவர்கள் கூடிய பாடசாலை ஆரம்ப பிரிவுக்கான இவ் நிகழ்வில் இப்பாடசாலையின் உப அதிபர் எம். என். எப்.சாஹிரா,பிரதி அதிபர் எம். வை.எப்.ஜென்னா,பொறுப்பாசியை எம். இஸட். எப். ரிஸ்வானா ஆகியோரும், பழைய மாணவிய சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். 



  • 1

VIDEOS

Recommended