தினம் ஒரு திருக்குறள் 03-05-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: May 2, 2024, 5:12:47 PM

குறள் 134:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

மு.வரதராசன் விளக்கம்:

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

கலைஞர் விளக்கம்:

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

English Couplet 134:

Though he forget, the Brahman may regain his Vedic lore;

Failing in 'decorum due,' birthright's gone for evermore

Couplet Explanation:

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed

Transliteration(Tamil to English):

maRappinum oththuk koLalaakum paarppaan

piRappozhukkang kundrak kedum

VIDEOS

Recommended