• முகப்பு
  • குற்றம்
  • திருக்கோவிலூர் அருகே தங்க சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறிப்பு

திருக்கோவிலூர் அருகே தங்க சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறிப்பு

கோபி பிரசாந்த்

UPDATED: May 2, 2024, 7:05:45 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கடைவீதியில் நேற்றுமாலை இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 4.5 சவரன் தங்கச் சங்கிலியை இரு வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் பறித்து சென்றனர். 

பைக்கில் தப்பி சென்ற நபர்களை  உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டும் , வாகன தணிக்கை செய்த போது சந்தேகிக்கும் வகையில் இருவரை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இருவரையும் காவல் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றபோது காவலரிடமிருந்து தப்பி அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்தனர். 

அவர்களை சுற்றி வளைத்து விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது ,  அதிகாலையில் அபிமன்யம் (23), அருள் ஜோதி (26) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended