• முகப்பு
  • குற்றம்
  • மேல்விஷாரத்தில் காட்டன் சூதாட்டம் பண மோசடியில் ஈடுபட்ட நபர்.

மேல்விஷாரத்தில் காட்டன் சூதாட்டம் பண மோசடியில் ஈடுபட்ட நபர்.

பரணி

UPDATED: May 4, 2024, 9:38:43 AM

இரா­ணிப்பேட்டை மாவட்டம் ஆற்­காடு அடுத்த மேல்­விஷா­ரத்­தில் காட்­டன் சூதாட்­டம் மூலமாக பண ஆசை­காட்டி பலரை மோசடி செய்­த தாக வாலிபரை போலீ­சார் கைது செய்து சிறையி­ல­டைத்­த­னர்.  

இரா­ணிப்­பேட்டை மாவட்ட எஸ்.பி. கிரண் ஸ்ருதி உத்­த­ரவின் பேரில் சட்­ட­வி­ரோ­த­மாக சூதாட்­டம் விளையா­டும் நபர்­க­ளை கண்­ட­றிந்து அவர்கள் மீது கடு­மை­யான  நட­வடிக்கை எடுக்­கப்­பட்டு வருகி­றது.

இந்நி­லையில் வெள்ளிக்கிழமை ஆற்­காடு காதர்­ ஜண்டா தெரு வை சேர்ந்­த சம்க அலியார் என்­ப­வர் அப்­பா­வி­க­ளி­டம் சிலர் பண ஆசைகாட்டி காட்­டன் சூதாட்­டம்  விளையாட வைத்து மோசடி செய்து வருவ­தாக ஆற்­காடு போலீ­சில் அளித்த புகா­ரின் பேரில் வழக்கு பதிந்து விசா­ரணை செய்த­தில்

குற்­ற­வா­ளியான மௌலா­பாஷா கண்­டறியப்­பட்டு தேடியதில் ஆற்­காடு அடுத்த மேல்விஷா­ரம் புளிய மரம் பேருந்து நிறுத்­தம் எதிரே உள்ள பெட்டி கடை அருகே சோதனை செய்­த­தில் அங்கு பதுங்கி இருந்த மௌலா­பாஷா (வயது49) கையும் களவு­மா­கப் போலீசா­ரி­டம்  பிடிபட்­டார்.

மேலும் அவர் காட்­டன் சூதாட்­டத்­திற்கு பயன் படுத்­தப்­பட்ட சீட்டு­கள்மற்றும் ரூபாய் 250 பறிமு­தல் செய்­யப்­பட்­டது.

இத­னை­யடுத்து போலிசார் மெள­லா  பாஷாவை கைது செய்து சிறை­யில்  அடைத்­த­னர்.

 

VIDEOS

Recommended