• முகப்பு
  • சென்னை
  • இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல்நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா

இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல்நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா

சுந்தர்

UPDATED: May 3, 2024, 8:26:53 AM

கடலூர் மாவட்டம் மேல்கவரப்பட்டு கிராமத்தே சேர்ந்தவர்கள் வேலு-அரசோதரி தம்பதியினர்.

இவர்களது மகள் ரமணி(22),சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் அறை எடுத்து தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வேலு-அரசோதரி தம்பதியினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நசரத்பேட்டை காவல்துறையினர் தங்கள் மகள் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு இறந்து விட்டதாகவும் உடனடியாக நீங்கள் நசரத்பேட்டை காவல்நிலையம் வருமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக சில மணி நேரங்களில் நசரத்பேட்டை காவல்நிலையம் வந்தடைந்த ரமணியின் உறவினர் ரமணியின் உடலை பார்த்ததும் ரமணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் ரமணியுடன் அறையில் தங்கியிருந்த ஆண் நண்பர் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவரை கைது செய்து விசாரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் காவல்துறை சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி நசரத்பேட்டை காவல்நிலைய வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல்நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

  • 5

VIDEOS

Recommended