பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.

மாமுஜெயக்குமார்

UPDATED: May 31, 2023, 6:29:45 PM

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள குருஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(25). இவர் சம்பவ நாளன்று இரவு வீட்டில் உள்ள தொலைக்காட்சியை ஆன் செய்துள்ளார்.

அதுசமயம், உயர் மின்னழுத்தத்தால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த காவல் துறையினர் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

இந் நிலையில், மின்வாரியத்தின் அலட்சியத்தால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்களிடம் பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி தலைமையில் காவல் துறை அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

இறந்த ஆறுமுகத்தின் மனைவி நிறைமாத கர்ப்பிணி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அரசு மருத்துவமனை பகுதியில் பெரும் பர... பரப்பையும்... பதற்றத்தையும்...ஏற்படுத்தியது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended