இளைஞர் வெட்டிக் கொலை: மர்ம நபர்களை தேடும் போலீசார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரும்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியகுடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (வயது34), இவர் தேனாம் பேட்டையை சேர்ந்த இவர், தனதுமனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், சுந்தர மூர்த்தியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
தகவலறிந்து சென்ற பெரும்பாக்கம்போலீசார், உடலைக்கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை அடுத்து அருகிலுள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்துதப்பியோடிய கொலையாளிகளை பெரும்பாக்கம் போலீசார் தேடிவருகின்றனர்.
செய்தியாளர்
பா. கணேசன்