மன இயல் புரிஞ்சா நீங்க தான் ஹீரோ.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ப்ளீஸ் அடுத்தவரை புரிஞ்சிக்கோங்க.... 1. மனிதனின் நல்ல பண்புக்குகாரணம், அவன் இருக்கக்கூடிய இடம், பழகக்கூடிய மனிதர்கள், அவன் தாய் தகப்பனார். 2. விபத்தில்சிக்கி மருத்துவமனையில் இருக்கும் நபரை பார்க்க போனால், அவரது குடும்பநபர்களிடம் எப்படி நடந்ததென கேட்காதீர்கள், அதை சொல்லிச்சொல்லி அவர்கள் மனம் இடிந்து போகும், அதை மற்றவர்களிடம்கேளுங்கள், இவர்களிடம் ஆறுதல்மட்டும் சொல்லுங்கள். 3. நம்மால்ஒருவருக்கு பிரச்சனைகள் வருகிற தென்றால் அந்த இடத்தை விட்டு விலகிடனும். அது உறவானாலும் சரி, நட்பென்றாலும் சரி. 4. பிறரை எண்ணி தேற்றிக்கொள்வதும் மனம் தான். பிறரைப்போல் எண்ணி தாழ்த்திக்கொள்வதும் அதே மனம்தான். 5. நம்மதிப்பு தெரியாதரிடம் மரியாதையை எதிர்பார்ப்பது தவறு. 6. அளவுக்கு அதிகமான புத்திசாலித்தனம் சிலவேளைகளில் உங்களை சிறந்தமுடிவை எடுக்க அனுமதிக்காது. 7. சோகமான நேரம் கூட சுகமாக மாறிப்போகும், வலிகள் கூட தொலைந்துபோகும் நல்ல நண்பர்களுடன் இருந்தால். 8. நீங்கள் உங்களைப்பற்றி நல்ல விதமாக உணராதவரை இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச்செய்வது சாத்தியமில்லை. 9. உறவு, நட்பு, தொழில் கூட்டாளி எதிலும் ஒருவரிடம் பழகும்போது பிடிக்கவில்லை எனில் ஆரம்பத்திலேயே விலகிவிடுங்கள், அது இருவருக்குமே நல்லது. 10. பெண்ணிற்கு சிறந்தகல்வியை வழங்குவதோடு நல்ல துணையை அமைத்துக்கொடுத்து விடுங்கள். கல்வி அவளுக்கு புகழைத்தந்தாலும் புரிந்து கொண்ட கணவனால் மட்டுமே நிம்மதியை தர முடியும். 11. அநியாயத்தை தட்டிகேட்பதில் எல்லாருக்குமே விருப்பம்தான். ஆனால் அதையும் வேடிக்கைமட்டுமே பார்க்கும் கூட்டம்தான் நம்மை ஊமையாய் கடந்துவிட செய்கிறது. 12. கொஞ்சகாலம் எல்லா பிரச்சினைகளையும் ஒதுக்கிவைக்கலாம் என்று பார்த்தால், அது நம்கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது. 13. தெரியாததை தெரிந்துகொள்ள வெட்கப்பட்டுக் கொண்டு அமைதியாக இருப்பதைவிட, தைரியமாக எல்லா சந்தேகங்களையும் தெளிவு படுத்திக்கொள்வது சிறந்தது. 14. சில ஆண்களின் எண்ணம், பெண்கள் அனைவரும் சுய நலவாதிகள் என நினைக்கிறது. ஆனால் பலபெண்கள் தனக்கெனவாழ்ந்ததே இல்லை. 15. பணக்காரராக இருப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நீங்கள்விரும்பும் அனைத்தையும் கொண்டிருக்கவேண்டும். மற்றொன்று உங்களிடம் இருப்பதில் திருப்தியடைய வேண்டும். 16. ஒருமனிதன் தன்னை மிகச்சிறந்தவராக எப்படி எல்லாம் தயார் படுத்திக்கொள்ளலாம் என்பதற்கு நிறைய வழிமுறை வகுப்புகள் இருக்கின்றன, என்னவொரு பிரச்சினை எனில் ஒழுங்கற்ற, சீரற்ற ஒரு சமூக அமைப்பில் இருந்து கொள்வதால் இந்த வழிமுறைகள் எல்லாம் பயனற்றுப்போகின்றன. 17. தானுண்டு தன் வேலை உண்டு" என்று இருப்பதற்கு மறுபெயரே சுய நலம். 18. பிறரைப்பற்றி பொறாமைப்பட நேரமிருந்தால், அதை உங்கள் அடுத்த உயர்வுக்கான சிந்தனையாய் மாற்றிக்கொள்ளுங்கள். பயனிருக்கும். 19. உங்களைக்குறைத்து மதிப்பிடுபவரிடம், உங்கள் உயரத்தை "விளக்கிக்கொண்டு" இருக்காதீர்கள். 20. தான்எந்த ஒரு வேலையும் செய்து கஷ்டப்படக்கூடாது என நினைப்பவர்கள் சோம்பேறியாகி விடுகிறார்கள். 21. வாழ்க்கையில் நம்மை காயப்படுத்திய விஷயங்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள் தான் நம் முன்னேற்றத்திற்கானவழிகள். 22. பெண்களின் திருமணதிற்கு "சீர்" செய்வதோடு, பெண்களின் திருமண வாழ்க்கையை "சீர்" செய்வதே ஒரு சிறந்ததந்தையின் கடமையாகும். 23. மகிழ்ச்சி வேண்டுமானால் பணம்சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் நிம்மதி என்றும் மனம்சார்ந்தது தான். 24. நாம் கஷ்டப்படும் போது வருத்தப்படாதவர்கள், நாம் சந்தோஷமாக இருக்கும் போதுமட்டும் பொறாமைப் படுவார்கள். 25. உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதைவிட முதலில் உங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில் உங்கள்வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உங்கள் உணர்வுகள் தான். 26. நாம் நடந்து கொள்ளும்முறையே நம்மை சிறப்பிக்கும். 27. உங்களின் அருமை தெரிந்தவர்களிடம் கோபம்காட்டாதீர்கள். 28. உங்களின் குணம் அறியாதவர்களிடம் மரியாதை எதிர்பார்க்காதீர்கள். 29. குறைகளை மட்டுமேகூறாதீர்கள்! 30. நிறைகளை நேரம்கிடைக்கும் போதெல்லாம் கூறுங்கள். 31. பெற்றோருக்குமுதலில் பிள்ளையாய்இருங்கள்! நாட்டுக்கு நல்லவனாய் பிறகுமாறுவீர்கள்! 32. கை பிடித்தவளை கலங்க வைக்காதீர்கள்! காலக் கடைசியில் அவளே உங்கள் தாயாவாள் மறக்காதீர்கள்! 33. நண்பன் வீடென்றால் இழுத்துபோட்டு எல்லா வேலைகளையும்செய்யுங்கள்! 34. எதிரி என்றால் தள்ளிநின்று பேசுங்கள். 35. துரோகி என்றால் அந்ததிசையே செல்லாதீர்கள்! 36. வாழ்வில் விட்டுகொடுங்கள் வாழ்க்கையையேவிட்டு கொடுக்காதீர்கள். ***அனுபவஸ்தன்***

VIDEOS

RELATED NEWS

Recommended