மாதர்பாக்கம் அருகே மாநெல்லூர் சுடுகாடு பகுதியில் கஞ்சாவுடன் பெண் கைது. பாதிரிவேடு போலீசார் விசாரணை.
மகேஷ் குமார்
UPDATED: May 21, 2023, 6:40:12 AM
மாதர்பாக்கம் அருகே மாநெல்லூர் சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணை விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் அளித்ததன் அடிப்படையில்,
அவரை பெண் காவலர் சோதனை செய்த போது அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மாநெல்லூர் பகுதியைச் சேர்ந்த இந்து என்கிற இந்துமதி வயது 27 என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.