Author: THE GREAT INDIA NEWS

Category: district

கள்ளக்குறிச்சி : கைகள் பயன்படுத்தாமல்! பிரஷ் பயன்படுத்தாமல்! தன்னுடைய கைகளைக் கயிற்றால் கட்டிக்கொண்டு! உடம்பு முழுவதும் கயிற்றால் சுற்றி கட்டி , கயிறை வாயால் கவ்விக்கொண்டு, அந்தக் "கயிற்றாலேயே" நடிகர் அஜித் படத்தை வரைந்து ஓவியர் அசத்தல்....!!! கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை ஊரைச் சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன்னுடைய கைகளை கயிற்றால் கட்டிக் கொண்டு உடம்பு முழுதும் கயிறால் சுற்றி கட்டிக்கொண்டு மீதி ஒரு பகுதி கயிற்றை வாயால் கவ்விக்கொண்டு நடிகர் அஜித் குமார் படத்தை வரைந்தார். ஓவியர் செல்வம் அவர்கள் தன்னுடைய ஓவியத் திறமையால் புதுமையான முறையில் நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடிகர் அஜித் அவர்கள் தனி ஒருவனாக, விடாமுயற்சியால், தன்னம்பிக்கையுடன் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, தனி ஒருவனாக எதிர்நீச்சல் போட்டு வெற்றி அடையும் எண்ணம், தன்னம்பிக்கை போன்ற குணங்களை செயல்களை குறிக்கும் விதமாக ஓவியர் செல்வம் அவர்கள் தன் ஓவியத் திறமையால் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வெற்றி அடையும் எண்ணம் தனி ஒருவன் போன்ற குணத்தை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய கைகளை கயிறால் கட்டிக்கொண்டு, உடம்பு முழுவதும் கயிற்றால் சுற்றி சுற்றி வளைத்து கட்டிக்கொண்டு மீறும் ஒரு பகுதி கயிறை தன் வாயால் கவ்விக்கொண்டு, வாயில் இருக்கும் கயிற்றை நீர்வண்ணத்தில் தொட்டு 20 நிமிடங்களில் நடிகர் அஜித் குமார் உருவத்தை ஓவியர் செல்வம் அவர்கள் வரைந்தார். இந்த ஓவியத்தை கண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பிரஷ் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, உடம்பு முழுவதும் கயிற்றால் கட்டிக்கொண்டு, கயிற்றை வாயால் கவ்விக்கொண்டு நடிகர் அஜித் படத்தை வரைந்த கோவில் செல்வம் அவர்களை வியப்பாக பார்த்து பாராட்டினார்கள். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Kallakurichi flash news,kallakurichi breaking news tamil,kallakurichi news today tamil,breaking news today tamil,Arts,Without the use of hands, Without using a brush, actor Ajith draws the picture and the painter is stunning

Tags:

Comments & Conversations - 0