- முகப்பு
- இரஷ்ய தயாரிப்பு விமானங்கள் வருங்காலத்தில் இந்திய விமானப்படையில் செயல்படுமா ?
இரஷ்ய தயாரிப்பு விமானங்கள் வருங்காலத்தில் இந்திய விமானப்படையில் செயல்படுமா ?
Amsa
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இந்திய விமானப்படை நெடுங்காலமாகவே இரஷ்ய தயாரிப்பு விமானங்களை தனது படையில் இணைந்து இயக்கி வருகிறது.
சுகாய்-7 , மிக்-21,23,25,27,29 , சுகாய் -30 என நெடுங்காலமாகவே இந்திய விமானப்படையில் இரஷ்ய தயாரிப்பு விமானங்கள் இருந்துள்ளன.
ஆனால் தற்போது சுகாய்-30 எம்கேஐ இந்திய விமானப்படையின் கடைசி இரஷ்ய தயாரிப்பு விமானமாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரஷ்ய அடுத்த தலைமுறை 5ம் தலைமுறை விமானான Su-57/FGFA மேம்படுத்தி தயாரித்து வருகிறது.இதை இந்தியாவிற்கு வழங்க தயாராக உள்ளது.மேலும் இந்தியாவும் இந்த விமானங்களை வாங்க முன்வந்தது .
எனினும் இரஷ்யா விதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப பறிமாற்றம் தொடர்பான பிரச்சனைகளால் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட இந்தியா கைவிட்டு தனது சொந்த ஐந்தாம் தலைமுறை விமான தயாரிப்பில் முழு மூச்சில் இறங்கியுள்ளது.