• முகப்பு
  • district
  • மன்னார்குடி ஒன்றியம் மூன்றாம் சக்தி கிராமத்தில் கிராம சபா கூட்டம், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?

மன்னார்குடி ஒன்றியம் மூன்றாம் சக்தி கிராமத்தில் கிராம சபா கூட்டம், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மூன்றாம் சக்தி கிராமத்தில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் , ஊராட்சி செயலாளர் கலியமூர்த்தி, வார்டு உறுப்பினர் கலைமதி பாக்யராஜ், இவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் அவர்கள் வார்டு உறுப்பினர் அனைவரும் சிறப்பாக செயல்படுவதாக மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர். மக்கள் அனைவரும் பட்டா வேண்டும், வீடு கட்டித்தர வேண்டும், 100 நாள் அட்டை புதிதாக வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்தனர். மூன்றாம் சக்தி கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால் வேறு நான்காம் சக்தி பஞ்சாயத்தில் பொருள்கள் வாங்குவதால் மூன்றாம் சக்தி பஞ்சாயத்தில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் . மூன்றாம் சக்தி குளத்தில் ரிட்டன் வால்வு அமைக்கவும் , வாய்க்கால் மொத்தம் தூர்வார வேண்டும் மற்றும் ரோடு வசதி செய்து தரவேண்டும் என தீர்மானங்கள் போடப்பட்டன . போடப்பட்ட தீர்மானத்தில் வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் கையெழுத்து இடப்பட்டு ஊராட்சி செயலர் கலியமூர்த்திடம் ஒப்படைக்கப்பட்டன. மன்னார்குடியை செய்தியாளர் எஸ்.வீரமணி. இன்றைய செய்திகள் மன்னார்குடி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,thiruvarur flash news,mannargudi todays news tamil,mannargudi latest news,Grama sabha meeting in mannargudi panchayat near Mannargudi,Grama sabha

VIDEOS

RELATED NEWS

Recommended