- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கிழக்கு கடற்கரை ரெயில்பாதை கனவுத் திட்டம் நிறைவேறுமா.
கிழக்கு கடற்கரை ரெயில்பாதை கனவுத் திட்டம் நிறைவேறுமா.
கார்மேகம்
UPDATED: May 17, 2023, 7:15:43 AM
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது தென் தமிழக மக்கள் மட்டும் அல்ல தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களின் நீன்டகால கனவாக இருந்து வருகிறது.
தென் மாவட்டங்களில் மதுரைக்கு தெற்கே உள்ள பகுதிகளில் (1) விருதுநகர் - மானாமதுரை (2) திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரெயில் பாதைகள் தவிர மற்ற அனைத்து இடங்களிளும் உள்ள ரெயில் பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டவை ஆகும்.
திருநெல்வேலி நாகர்கோவில் 74 கி.மீ. நீளமுள்ள அகல ரெயில் பாதை 8/04/1981அன்றும். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 87 கிமீ அகல ரெயில் பாதை 15/04/1979 அன்றும் விருதுநகர் - அருப்புக்கோட்டை மீட்டர் கேஜ் பாதை 01/09/1963 அன்றும் அருப்புக்கோட்டை - மானாமதுரை மீட்டர் கேஜ் பாதை 02/05/1964 அன்றும் பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டன.
இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப் பட்ட இருப்பு பாதைகள் அதன் பிறகு எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் இதுவரை அமைக்கப்படவில்லை.
தற்போது சென்னை -கன்னியாகுமரி இருப்புப் பாதை வழித்தடம் தமிழகத்தின் முதன்மையான பாதையாக உள்ளது.
இந்த பாதையில் இருந்து கிளைப் பாதைகளாக நாகர்கோவில் - கன்னியாகுமரி ரெயில் பாதை திருநெல்வேலி திருச்செந்தூர்- ரெயில் பாதை மணியாச்சி -தூத்துக்குடி ரெயில் பாதை மதுரை- ராமேஸ்வரம் ரெயில் பாதை என பிரிந்து செல்கின்றன.
இவ்வாறு பிரிந்து செல்லும் பாதை கடற்கரை அருகில் உள்ள நகரங்களுடன் முட்டி நின்று விடுகின்றன.
இவ்வாறு முட்டி நிற்பதால் இந்த ரெயில் பாதை வழித்தடங்களை நீட்டிக்கவோ கூடுதல் ரெயில்களை இயக்கவோ முடியாத நிலை இருக்கிறது.
கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில் திருநெல்வேலி வழியாக 136 கி. மீட்டர் பயணித்து சுற்றுப் பாதையில் தான் செல்ல முடியும்.
கிழக்கு கடற்கரை ரெயில் பாதை அமைக்கப் பட்டால் 70 கி.மீ. மட்டுமே இதற்கான பயண தூரமாக இருக்கும் அதுபோல் கன்னியாகுமரி திருச்செந்தூர் தூத்துக்குடி ராமநாதபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் குறைந்த நேரந்தில் பயணிக்கலாம்.
கடற்கரை பாதை, கிழக்கு கடற்கரை ரெயில் பாதை கன்னியாகுரியில் இருந்து தொடங்கி கூடங்குளம் திருச்செந்தூர் தூத்துக்குடி ராமநாதபுரம் காரைக்குடி திருத்துறைப்பூண்டி திருக்குவளை வேளாங்கண்ணி நாகபட்டிணம் சீர்காழி கடலூர் புதுச்சேரி மகாபலிபுரம் வழியாக சென்னை வந்தடைகிறது.
இவ்வாறு அமையும் போது அந்த வழித்தடத்தில் உள்ள தூத்துக்குடி கடலூர் சென்னை எண்ணூர் புதுச்சேரி காரைக்கால் துறைமுகங்கள் அனைத்தும் நேரடியாக ரெயில் வழிப் பாதை மூலம் இனைக்கப் பட்டு விடும் இதனால் அந்த பகுதிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்.
கிழக்கு கடற்கரை ரெயில்பாதை அமைக்க உதவியாக தற்போது ஒரு சில இடங்களில் ரெயில் பாதைகள் இருக்கின்றன அதில் குறிப்பாக காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி 121 கி. மீ. ரெயில் பாதை அகல பாதையாக மாற்றப்பட்டு விட்டது.
பேரளம் - கடலூர் 91 கி.மீ.அகலப் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன கன்னியாகுமரி - சென்னை கிழக்கு கடற்கரை ரெயில் பாதையில் நடுப்பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் ரெயில் வழித்தடங்கள் தற்போது இருக்கின்றன,
ஆனால் சென்னையில் இருந்து கடலூர் வரையும் கன்னியாகுமரி முதல் காரைக்குடி வரையிலும் ரெயில் வழி தடம் இல்லை என்பது குறிப்பிட தக்கது.
இதில் காரைக்கால் - பேரளம் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி கூடங்குளம் திருச்செந்தூர் தூத்துக்குடி காயல்பட்டிணம் ஆறுமுகநேரி சாயல்குடி ஏர்வாடி கீழக்கரை ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரெயில் இருப்புப் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய 2008- 2009ம்ஆண்டு ரெயில்வே நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அப்போதைய திருச்செந்தூர் நாடாளுமன்ற உருப்பினரும் மத்திய இணை மந்திரியுமாக இருந்த ராதிகா செல்வியின் சீரிய முயர்ச்சியால் அந்தத் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதற்கான தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணி 2013 -2014 - ம் ஆண்டு முடிவடைந்து திட்ட மதிப்பீட்டை ரெயில்வே வாரியத்துக்கு தென்னக ரெயில்வே சமர்ப்பித்தது.
இந்த ஆய்வுப் பணிகள் இரண்டு பிரிவுகளாக நடந்தன முதல் பிரிவில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை புதிய ரெயில் பாதை அமைக்க ஆய்வுகள் நடந்தன அதன்படி 214.81 கி. மீட்டர் தூரம் ரெயில் பாதை அமைக்க ரூ.879 கோடி தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது இந்த வழித் தடம் தேவகோட்டை தேவிபட்டிணம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி சூரங்குடி குளத்தூர் வழியாக தூத்துக்குடி வந்து சேரும் வகையில் ஆய்வு செய்யப்பட்டது.
2 வது பிரிவு திட்டத்தின் படி கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி 247.66 கி. மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்க ரூ. 1080 கோடி தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
திட்டம் கிடப்பில் மாநில அரசின் பங்களிப்பு கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டம் ரேட் ஆப் ரிட்டன் குறைவாக இருக்கிற காரணத்தால் திட்டம் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்து இருக்கிறது.
இந்த அறிவிப்பு தென்மாவட்ட மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.