Author: THE GREAT INDIA NEWS

Category: political

காங்கிரஸில் இணையும் திட்டம் இல்லை என்பதை தொடர்ந்து, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அரசியல் பயணத்தை தனது சொந்த மாநிலம் பீகாரிலிருந்து தொடங்க உள்ளதாக நேற்று முன்தினம் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அவர் பதிவிட்டதில், "உண்மையான முதலாளிகளான" மக்களிடம், தான் செல்லப்போவதாக குறிப்பிட்டிருந்தார். பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் அல்லது மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கி தனது புதிய அரசியல் பயணத்திற்கு தொடக்கப்புள்ளி வைப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் அளவுக்கு அவரது கருத்து கவனத்தை ஈர்த்தது.  பிரசாந்த் கிஷோர், நாளை தனது புதிய அரசியல் கட்சி குறித்த விவரங்களை தெரிவிப்பார் என தெரியவருகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் அவர் சமூக ஆர்வலர்கள், ஆர்டிஐ ஆர்வலர்கள், மற்றும் பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து அவர் பேசியுள்ளார். மேலும், அவர் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளையும் அறியவிருப்பதாக தெரியவருகிறது. செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் இந்தியா,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,india news tamil,world news,india news in tamil today,india news today in tamil,Todays india news,india news today,With the news that a political party is going to start, election strategist Prashant Kishore has met them for what

Tags:

Comments & Conversations - 0