• முகப்பு
  • world
  • யார் இந்த கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு.

யார் இந்த கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விண்வெளிக்குச்சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனாசாவ்லா பிறந்ததினம் இன்று (ஜூலை 1, 1961) கல்பனாசாவ்லா (Kalpana Chawla) ஜூலை 1, 1961ல் இந்தியாவிலுள்ள ஹரியானாவில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ்லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, பஞ்சாபி குடும்பத்தில்பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும்இருந்தனர். கல்பானாசாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில்உள்ள அரசுபள்ளியில் தொடங்கினார். இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ.ஆர்.டி. டாடாவைப் பார்த்ததில் இருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம்ஏற்பட்டது. 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல்கல்லூரியில்” விமான ஊர்தியியல்துறையில் கல்விப்பயின்று இளங்கலைப்பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப்பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். 1988ம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) சி.எஃடி (CFD) ஆராய்ச்சிசெய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச்சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்று இருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்று இருந்தார். 1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த 2 ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87)ல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் விண்வெளியிலிருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். 1984ல் சோவியத்விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப்பெண் வீராங்கனை என்ற அழியாப்பெருமையை பெற்றார். STS-87ன் போது வின்ஸ்டன்ஸ்காட் மற்றும் தகாவோடோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் என்னும் செயல் குறைபாட்டில் இருந்த செயற்கை கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக்காரணமாக இருந்தார். ஐந்து மாதகால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக் கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது. STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில்நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே விருதையும் வழங்கிக் கௌரவித்தனர். முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த 5 ஆண்டுகளில் தன்னுடைய 2வது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002ம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம்கடத்தப்பட்டது. பின்னர், 2003ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளிஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியாவிண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியவம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்பட 7 பேர் அதில் பயணித்தனர். இந்த பயணத்தில் கல்பனா சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைக்ரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் , விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடு பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 16 நாள் ஆய்வைமுடித்து வெற்றிகரமாக பூமிக்குத்திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட 7 விலை மதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர். 1991-1992 ல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக்கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்தார். அதுவே இவரத இறுதி வருகையாக அமைந்தது. மறைவுக்குபின் அளிக்கப்பட்ட விருதுகள், அமெரிக்க காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்க பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor), நாசாவின் விண்ணோட்டப்பதக்கம் (NASA Space Flight Medal), நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal). கல்பனாசாவ்லாவின் நினைவாக பல இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித்தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது. பாராட்டுக்குரிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எல்பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்தியமாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றைக் 'கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ' என்று நிறுவியுள்ளது. ஜூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனாசாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும். இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர். மேரிலாண்டிலுள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது இராணுவ வீட்டுவசதி வாரியத்திற்குக் கொலம்பியாகாலனி என்று பெயரிட்டுள்ளது , அதற்கு சாவ்லா வே (Chawla way) என்னும் தெருவும்உள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன்ஹயிட்ஸ் என்னும் பகுதியிலுள்ள 74 ம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்றுபெயர் சூட்டப்பட்டது. குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் என்னும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனாசாவ்லா கோளரங்கம் என்று பெயர் சூட்டியது. நாசா கல்பனாவின் நினைவாக ஓர் அதிநவீனக் கணினியை அர்ப்பணித்துள்ளது. இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 ல் கல்பனாசாவ்லா விருது வழங்குகிறது. இதழ் மற்றும் புதினத்தில் ஆஸ்டீரோயிட் 51826 கல்பனாசாவ்லா - கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த 7 பாராட்டு இதழ்களில் ஒன்று. நாவலாசிரியர் பீட்டர்டேவிட் அவரது ஸ்டார்டிரெக், தி நெக்ஸ்ட்ஜெனரேசன் : பிபோர் டிசோனர் என்னும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்தபுதினத்தில் வரும் விண்கலத்திற்கும் பெயர் வைத்துள்ளார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிப்ரவரி 1, 2003ல் தனது 40வது அகவையில் விண்கலம் வெடித்து விண்ணில் கலந்துள்ளார். சாதாரணப் பள்ளியில் படித்து, பலரை வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்துகாட்டியவர் கல்பனாசாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப்புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப்பெண்ணை நாமும் போற்றுவோம்.

VIDEOS

RELATED NEWS

Recommended