திருப்பதி பிரம்மோற்சவம் எப்போது?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 27 ந்தேதி முதல் அக்டோபர் 5 ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. திருமலையில் ஆண்டு தோறும் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும்சிறப்பாக நடத்தப் பட்டு வருகிறது. இந்தாண்டு, செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை தொடர்ந்து, ஒன்பது நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. பிரம்மோற்சவ நாட்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப் பட்டு உள்ளன. கருட சேவைக்கு முன் தினம் மற்றும் மறு தினம் 'ஆன்லைனில்' அறைகள் ஒதுக்கப் படாது. பிரம்மோற்சவத்தின் மற்றநாட்களில், 50% சதவீதம் அறைகள் ஆன்லைன் முன் பதிவின் கீழும், மீதம் உள்ளவை நேரடி முன் பதிவின் கீழும் பக்தர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது. தேவஸ்தானத்தின் இந்து தர்மபிரசார பரிஷத்தின் கீழ் வாகன சேவைகள் நடக்கும்போது மாடவீதிகளில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலாசாரநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்

VIDEOS

RELATED NEWS

Recommended