மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்று வீடு திரும்பியபோது வேன் கவிழ்ந்து விபத்து இதில்...
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் விருகாவூர் கிராமத்திற்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு சென்று பின்பு வீடு திரும்பியபோது ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .
இதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
பின்பு விபத்தில் சிக்கிக்கொண்ட வாகனத்தை எந்திரம் மூலம் அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது ஒரே கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் விபத்தில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.