- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கோவில்பட்டி நகரில் குடிநீர் விநியோகம் தொடங்குவது எப்போது?
கோவில்பட்டி நகரில் குடிநீர் விநியோகம் தொடங்குவது எப்போது?
மாரிமுத்து
UPDATED: May 9, 2023, 12:37:08 PM
கோவில்பட்டி நகருக்கு குடிநீர் தரும் சீவலப்பேரியில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் உள்ள 3 மின் மோட்டார்கள் பழுது காரணமாக கடந்த 10 தினங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லை...
இந்நிலையில் ஒரு மின் மோட்டார் புதியதாக வாங்கப்பட்டு அதனை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகர் மன்ற தலைவர் கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
மேலும் உள்ள 2 மின் மோட்டார்கள் முற்றிலுமாக பழுதாகி விட்டதால்.. அதற்கு பதிலாக புதிய மின் மோட்டார்கள் வாங்கி பொருத்தவுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலைக்குள் புதிய மின் மோட்டார் செயல்பட தொடங்கிவிடும், நாளை முதல் குடிநீர் விநியோகம் இருக்கும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.