அதிமுக எதிர்காலம் எப்படி இருக்கும்?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பட்சி சோதிடம்.
எடப்பாடி தரப்பிற்கு இன்றைய தேதியில் நல்லதும் கெட்ட தும் இணைந்தே நடந்திருக்கிறது.
ஒரு பக்கம் பொதுச் செயலாளர்
இன்னொரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைத்தது.
சின்னம் முடக்கப் பட்டால் என்ன ஆகும்.....?
அது தான் மெஜாரிட்டியில் எடப்பாடி வந்துட்டாரே. என்ன மெஜாரிட்டி இருந்தாலும்,
மோடி நினைத்தால் எப்படி வேணுமினாலும் நடக்கலாம்..
முதலில் மோடி ஆதரவுயாருக்கு என்பது இதுவரை சஸ்பென்ஸ்......
ஒருவேளை மோடி ஆதரவு ஓ.பி.எஸ்க்கு இருந்தால் இரட்டையிலையை எளிதாக முடக்க முடியும்.
இருப்பினும் ஓ.பி.எஸ்ஸின் அடுத்த மூவ்மென்ட் தன்னிடம் உள்ள இரட்டை இலை சின்னத்தை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைக்கு உரிமை கோரும் போராட்டமாகவே இருக்கும்..
மேலும் கொடநாடுவழக்கு இப்போது திடீரென சூடு பிடிக்கிறதை பார்த்தால் ஏதோ ஒரு திட்டம் இருப்பது போல் தான் தெரிகிறது..
குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை பா.ஜ.க தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது என்றே தெரிகிறது.
எடப்பாடிக்கு இவ்வளவு பேர் ஆதரவு தர காரணம் என்ன?
ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு துரத்திவிட்டால்...
பிறகு.....?
அடுத்தது கோடநாடு வழக்கு தானாகவே எடப்பாடியை இழுத்துக்கொள்ளும்.
அப்போது...?
நாம் தான் அதிமுக பொது செயலாளர் என ஒவ்வோரு பெரும்புள்ளிகளும் கனவு காண்பதாக பட்சி ஜோதிடம் சொல்கிறது.
எடப்பாடியோ உள்ளே போனாலும் வாரிசிடம் ஒப்படைத்து விட்டு போகலாம் என பட்சி சொல்கிறது.
சசிக்கலா நிலமை இலவு காத்த கிளி தான்.....
தினகரன் தனிக்குடும்பம் போயிட்டாரே.......
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா சிறைச்சென்றார்
அடுத்து பொது செயலாளர் சசிகலா சிறைச்சென்றார்.
அடுத்தது அவ்விடத்தை துண்டு போட்டு எடப்பாடி பிடித்துள்ளார். கோடநாடு டெட்பாடி கேஸ் எடப்பாடியை சிறைக்கு அனுப்ப கேட்டை திறப்பதாக பட்சி ஜோதிடம் சொல்கிறது.
ஆக எம்ஜிஆர் உருவாக்கி... ஜெயலலிதா காத்து வளர்த்த அதிமுக இன்று பங்காளிகளால் அழிந்துக்கொண்டிருக்கிறது.
***அனுபவஸ்தன்***