இலவச பேருந்து பயணம் என்னென்ன தேவை?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாநகர போக்கு வரத்துக் கழக பேருந்துகளில், மூத்தகுடிமக்கள் இலவசமாக பயணம்செய்யும் வகையில், கட்டணம் இல்லா பேருந்து பயணடோக்கன்கள் ஜூன் 21 ம்தேதி முதல் வழங்கப் படும் என மாநகா்போக்கு வரத்து மேலாண்மை இயக்குநா் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாநகா் போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், அறுபது வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ்மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம்செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயணடோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு ஜூன் மாதம் வரை பயணம்செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயணஅட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கெனவே வழங்கப் பட்டுள்ளன. அடுத்த அரையாண்டுக்கு, ஒருமாதத்துக்கு பத்து டோக்கன்கள் வீதம், ஆறு மாதங்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணடோக்கன்கள், பயண அட்டைகள் நாற்பது மையங்களில், ஜூன் 21 ந்தேதி முதல் ஜூலை 31 ந்தேதி வரை காலை 8மணி முதல் இரவு 7.30மணி வரை வழங்கப்படும். அதன்பின்னா் 1. 8. 2022 முதல் அந்தந்தபணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப் படும். சென்னைவாழ் மூத்தகுடிமக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண அடையாளஅட்டை, டோக்கன்களை புதிதாகபெறுவதற்கு இருப்பிடச்சான்றாக குடும்ப அட்டையின்நகலுடன், வயதுச்சான்றாக ஆதாா்அட்டை, ஓட்டுநா்உரிமம், கல்விசான்றிதழ், வாக்காளா்அடையாள அட்டையின் நகல், இரண்டு வண்ண பாஸ் போா்ட் அளவிலான புகைப்படங்களை சமா்ப்பிக்கவேண்டும். சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரி பாா்த்திட ஏதுவாக அவற்றின்அசலை கையில்வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்கவரும் மூத்தகுடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயணஅடையாள அட்டையை மட்டும்கொண்டு வர வேண்டும் என அதில்கூறப்பட்டுள்ளது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended