வெள்ளாமை இயக்கம் கிறிஸ்தவ பறையர்களின் கோரிக்கை மாநாடு.
JK
UPDATED: May 21, 2023, 8:30:00 PM
திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள தேவாலய அரங்கத்தில் வெள்ளாமை இயக்கத்தின் கிறிஸ்துவ பறையர்களின் கோரிக்கை மாநாடு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, துணைச் செயலாளர் அகிலாராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தீர்மானமாக அரசியலில் கிறிஸ்தவ பறையர்களுக்கு, (பங்கு) தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், கிருஸ்தவர்களிள் அதிக எண்ணிக்கை கொண்ட திருச்சபையில் அதிக இட ஒதுக்கீடு வழங்கி கல்வி, வேலைவாய்ப்பு, கொடுத்திட வேண்டும்,
தமிழக அரசு கிருஸ்துவ பறையர்களுக்கு இருக்க இடம், இல்லாதவர்களுக்கு இடம் வேண்டியும், வறுமையில் வாழும் மக்களுக்கு நிதி உதவி இயக்க வழியாக செய்திட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக வலியுறுத்தினர்.
இந்த மாநட்டில், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.