பிஜேபி ஆட்சியை அகற்றுவோம்! நாட்டையும் மக்களையும் காப்போம் பிரச்சார நடைபயணம்
இளவரசன்
UPDATED: May 10, 2023, 1:38:26 PM
நாட்டையும் மக்களையும் காப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கசியின் சார்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்று வருகிறது. மன்னார்குடி ஒன்றியம் பூதமங்கலத்தில் நடைபெற்ற நடைபயண இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் துவக்கி வைத்து பேசினார்.
இதில் கட்சியின் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏ.ரமேஷ்குமார், எம்.இளரா, விவசாயிகள் சங்க தலைவர் எம்.தம்புசாமி, கிளை செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், எம்.சேட்டுரவி, டி.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வ.பூதமங்கலம், வேளூக்குடி, சித்தனக்குடி, பாரதி மூலங்குடி உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரச்சாரம் கொடுத்து மேடி அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது...