வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய கழக பரந்தூர் ஊராட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
லட்சுமி காந்த்
UPDATED: May 10, 2023, 6:48:29 PM
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், ராஜகுலம் கூட்டுறவு வங்கி தலைவருமான அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ் அவர்கள் தலைமையில் பரந்தூர் மற்றும் சிறுவள்ளூர் ஊராட்சியில் , புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சிறுவாக்கம் , புரிசை , வளத்தூர்,பரந்தூர், சிறுவள்ளூர் உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இரு ஊராட்சிகளிலும் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு கிளை செயலாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பரந்தூரில் வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கிளைக் கழக செயலாளர்கள் தீவிரப் பணியாற்றி இன்னும் ஐந்து தினங்களுக்குள் அதிக புதிய உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும், யாருக்காவது ஏதாவது கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள் இருந்தால் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் கழகத்திற்காக அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல் சிறுவள்ளூரில் பேசும்போது, புரட்சித்தலைவி அம்மா மீது பற்று உள்ளவர்கள் எடப்பாடியார் மீது பாசம் உள்ளவர்கள் என அனைவரையும் தேடி கண்டுபிடித்து கழகத்தில் புதிய உறுப்பினராகவும் சேர்த்து 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.