• முகப்பு
  • crime
  • வியாசர்பாடியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் வியாசர்பாடி காவல் துறையால் கைது.

வியாசர்பாடியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் வியாசர்பாடி காவல் துறையால் கைது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை, பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் முகமது அலி (வ/47) என்பவர் கடந்த 03.04.2022 அன்று இரவு 10.00 மணியளவில் வியாசர்பாடி, AA ரோடு, பி.எஸ்.என்.எல் சாலை சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மேற்படி முகமது அலி வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து முகமது அலி வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. வியாசர்பாடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1) திவாகர் (வ/22) ஓட்டேரி 2) ஆனந்தகுமார் (வ/22) பெரம்பூர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட திவாகர் மீது கஞ்சா வழக்கும், ஆனந்தகுமார் மீது வழிப்பறி வழக்கு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணையில் இருவரும் சேர்ந்து வியாசர்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,Vyasarpadi police have arrested two persons for robbing a cellphone in Vyasarpadi,theft,robbery,rowdies,rowdy

VIDEOS

RELATED NEWS

Recommended