• முகப்பு
  • குற்றம்
  • துறையூர் அருகே உள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் விடுதி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவமனையில் அனுமதி.

துறையூர் அருகே உள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் விடுதி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவமனையில் அனுமதி.

அருண்

UPDATED: May 14, 2023, 2:15:59 PM

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் விடுதி மாணவ மாணவிகள் இன்று மதிய உணவு அருந்தி உள்ளனர் குஸ்கா மற்றும் ரசம் சாதம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரசம் சாதம் உண்ட சுமார் 17 மாணவர்கள் 10 மாணவிகள் உட்பட அனைவருக்கும் வாந்தி மயக்கம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சக மாணவர்கள் அவசர ஊர்தி 108 மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் அரசு மருத்துவர்கள் உடனடியாக அனைவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் மதியம் சாப்பிட்ட ரசம் சாதத்தில் பல்லி இருந்துள்ளது, மேலும்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே விடுதியில் உணவு சரியில்லை என மாணவ மாணவிகள் நிர்வாகத்தை முறையிட்டு கண்டித்துள்ளனர்.

ஆனால் நிர்வாகம் அதனை கண்டு கொள்ளவில்லை என கூறுகின்றனர். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் வேதனையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended