- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவள்ளூர், வல்லூரில் விசிக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர், வல்லூரில் விசிக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
L.குமார்
UPDATED: May 22, 2023, 9:38:59 AM
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் தெற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாய் திரள்வோம் வல்லூர் முகாம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் தெருமுனை கூட்டமும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வல்லூர் கரையான்மேடு சாலை மற்றும் வடசென்னை சாலை ஓரங்களில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
மேலும் திருமாவளவன் அவர்களின் மணிவிழா, கொடியேற்றுதல், நல திட்ட உதவிகள், தெருமுனை கூட்டம், உள்ளிட்ட முப்பெரும் விழா வல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மா.உமாபதி தலைமை வகித்தார், பொறியாளர் அணி இணை செயலாளர் வல்லூர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.