விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் பனையேரிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.
மேஷாக்
UPDATED: May 27, 2023, 11:19:12 AM
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் பனையேரிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உண்ணாவிரத போராட்டத்தின் கோரிக்கைகள் :
தமிழ்நாட்டில் உடனடியாக கள் தடையை நீக்கி, கள்ளை இறக்கவும் பருகவும் விற்கவும் பனையேறிகளுக்கு உள்ள உரிமையை உறுதி படுத்திடு
சாராயப் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பனையேறிகளை உடனடியாக விடுதலை செய்திடு..
பனையேறிகள் மீது சாராய பொய்வழக்கு புனைந்த காவல்துறை அலுவலர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்திடு..
பூரிகுடிசை கிராம பெண்களை தகாத வார்த்தைகள் பேசி இழிவு படுத்திய கஞ்சனூர் காவல்துறை ஆய்வாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்திடு.
இதில் பூரிகுடிசை, நரசிங்கனூர் கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சுற்றியுள்ள கிராம இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.