சரஸ்வதி கல்வி கலாச்சார அறக்கட்டளை சார்பாக வசந்த் உட்சவ் 2023 கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
TGI
UPDATED: May 6, 2023, 9:42:41 AM
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் சரஸ்வதி கல்வி கலாச்சார அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
11 நாட்கள் நடைபெற உள்ள நிகழ்ச்சியின் முதல் நாளில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்கள்ல பேசிய அறக்கட்டளையின் செயலாளர் பிரியதர்ஷினி ராஜ்குமார் தங்களது அறக்கட்டளையின் சார்பாக நமது கலாச்சாரத்தை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் முதல் நாளான இன்று பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார்.