விக்ரமன் குத்தாலத்தில் ஸ்ரீ மகா காளியம்மனுக்கு முதலாம் ஆண்டு வைகாசி திருவிழா.
தாரிக் கனி
UPDATED: May 22, 2023, 11:23:21 AM
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா விக்ரமன் குத்தாலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா காளியம்மனுக்கு முதலாம் ஆண்டு வைகாசி திருவிழா நடைபெற்றது.
தீர்த்தப்படித்துறையில் இருந்து பால்குடம் அலங்கார காவடி வான வேடிக்கை முழங்க மேளதாள வாத்தியங்களோடு புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கங்கணம் கட்டிக் கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சிவாத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர், இரவு ஸ்ரீ மகா காளியம்மன் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.