மணப்பாறை கோட்டை பூலாம்பட்டி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதை யொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேல்லை கோவிலுக்கு கொடுத்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மணப்பாறை அடுத்து கோட்டை பூலாம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ கோட்டை மகாமுனி, ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இன்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவிலுக்கு வருகை தந்தார்.
அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை அளித்தனர். சாமி தரிசனம் செய்தார் அதன் பின்பு வேல்லை கோவிலுக்கு கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெற்றிவேல் வீரவேல் என பொதுமக்களுடன் சேர்ந்து கோஷம் எழுப்பினார்.
அதன் பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மட்டபாறைபட்டியிலுள்ள ஶ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சாலை மார்க்கமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய புறப்பட்டார் நிகழ்ச்சியில் வையம்பட்டி பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ஆனந்த் தலைமையில் செந்தில் தீபக், முன்னால் மாவட்ட பொதுசெயலாளர்,
மாவட்ட துணை தலைவர் லலிதா,
முன்னால் மாவட்ட செயலாளர் சுரேஷ் ,
முன்னால் மணப்பாறை வடக்கு ஒன்றிய தலைவர் அயோத்தி கண்ணன், அஞ்சாநெஞ்சன், மாவட்ட தலைவர்,
பா.ஜ.க. நிர்வாகிகள். சி.பிச்சை, குமரேசன், பி.செல்வம், கே.துரை, ஸ்ரீராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மணப்பாறை செய்தியாளர் C. இலட்சுமணன்