தமிழ்தாய் வாழ்த்தை அவமானப்படுத்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மத்திய அமைச்சர் மாண்புமிகு நிதின்கட்காரி இன்றைய நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்தது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுப் படுத்துவதாக உள்ளது.
மத்திய அமைச்சர் எதனால் எழுந்து நிற்கவில்லை என்பதை தமிழ்மக்களுக்கு விளக்க வேண்டும்.
2018 - ஆண்டில் ஐ.ஐ.டியில் அவர் கலந்துக்கொண்ட விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததும் இன்று அவர் நடந்துக்கொண்ட விதமும் எதேச்சையாக நடந்ததாகதெரியவில்லை.
தமிழ் நாடு அரசு வெளியிட்ட தமிழ் தாய் வாழ்த்துக்கு மதிப்புகொடுக்க மாட்டார்கள் வட நாட்டார்கள் என்பதற்கு உதாரணம் இவரே என தேச பற்றாளர்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர் க. துர்கா மதன்குமார்