பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஆட்சியர் 19 பயனாளிகளுக்கு ரூ 9.50 லட்சம் வைப்புத் தொகை வழங்கினார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஶ்ரீ வெங்கடபிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.06.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறையின் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் இரண்டு பெண்குழந்தைகளின் 19 பெற்றோர்களிடம் அவர்களது குழந்தைகளின் பெயரில் ரூபாய் ரூ.9.50 லட்சம் செலுத்தப்பட்டதற்கான வைப்புத் தொகை பத்திரத்தினை குழந்தைகளின் பெற்றோர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் மனுக்களின் மீது தனிக்கவனம் செலத்தி அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படவேண்டும்.
ஒவ்வொரு வார மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும், கடந்தவாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடி வந்து பொதுமக்கள் தரும் மனுக்களை உரிய ஆய்வுக்குட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் நம்பிக்கையினை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்றவேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 223 மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, தனித்துணை ஆட்சியர் சமூக (பாதுகாப்புத்திட்டம்) சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் ரவி பாலா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொணடனர்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.