உளுந்தூர்பேட்டை வட்டார சதுரங்க போட்டி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை முன்னிட்டு வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இதில் 6 - 8, 9 - 10, 11 - 12 வகுப்பு வரை என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்து நடைபெற உள்ள, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார், உளுந்தூர்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை ஆய்வு செய்தார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம் டேனியல்ராஜ் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல்களை வழங்கினார்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் நாகராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் சிவ.ஈஸ்வரன், ஆனந்த எழிலரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் அஜய்குமார்