கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை திறந்தபடி தூங்கிய வீட்டில் இரண்டு சவரன் தங்க நகை 20 ஆயிரம் ரொக்கப் பணம் செல் போன் திருட்டு.
மகேஷ் குமார்
UPDATED: May 11, 2023, 5:53:20 AM
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வி எம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் ஜெயசுதா தம்பதியர்.
இவர்கள் இருவரும் வழக்கம் போல் வீட்டின் முன் கதவை திறந்து விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நள்ளிரவில் வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த இரண்டு சவரன் தங்க நகை 250 கிராம் வெள்ளி கொலுசு 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளான்.
தூங்கி எழுந்த தம்பதியர் வீட்டின் பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து பீரோவை ஆய்வு செய்தபோது வீட்டில் இருந்த மேற்கண்ட பொருட்கள் மாயமானது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அருகாமையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.