• முகப்பு
  • குற்றம்
  • பண்ருட்டி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து இரண்டு பேர் அதிரடி கைது.

பண்ருட்டி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து இரண்டு பேர் அதிரடி கைது.

இடும்பன்

UPDATED: May 16, 2023, 1:26:36 PM

பண்ருட்டி அருகே மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மகன் கலைமகன் (27).இவர் தனது நண்பர்களுடன் வல்லம் ஏரிக்கரையில் நேற்று 15-5-23 பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது கலைமகன் தனது செல்போனில் நெய்வேலி வட்டம் 3-ஐ சேர்ந்த அகிலன் (23) என்பவருடன், நெய்வேலி வடக்குத்து ரவுடியான கோபியுடன் நீ பேச கூடாது என எச்சரித்தார்.

அதற்கு அவர் ஏன் பேசக்கூடாது, நீ எங்கு இருக்கிறாய் என கேட்டு வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண்பர்களுடன் வந்தார்.

அப் போது ஏற்பட்ட தகராறில் கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக கலைமகனை வெட்டினர். அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் காயம் அடைந்தவரை மீட்டு கடலூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் செல்போன் மூலம் பேசி முந்திரிதோப்பில் மறைந்து இருந்த அகிலன் (23), அவரது நண்பர் பொறியாளர் வட்டம் 10-ஐ சேர்ந்த தமிழ் அரசன் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended