நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் பகுதியில் இரண்டு பேருந்துகள் சிறைபிடிப்பு.

பிலிப்ராஜ் ரவி

UPDATED: May 26, 2023, 7:22:41 PM

நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் பகுதியில் 26.5.2023 காலை சுமார் 10 மணி அளவில் பொதுமக்கள் இரண்டு பேருந்துகளை சிறைப்பிடித்து பத்தாவது வார்டு கவுன்சிலர் அபுதாஹீர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

பல வருடங்களாக ஆறு முதல் ஏழு பேருந்துகளை இயக்கிக் கொண்டிருந்த போக்குவரத்து துறை திடீரென இரண்டு பேருந்துகளை இயக்க ஆரம்பித்தனர்.

இப்பகுதியில் பள்ளிக் குழந்தைகள் அரசு அலுவலகத்திற்கு செல்கிறவர்கள் வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்கள் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் திடீரென பேருந்துகளை குறைத்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை அளித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதகை ஜி1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் நான்கு பேருந்துகளை இயக்க உத்தரவு இடுவதாகவும் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சில மணி நேரங்கள் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது...

VIDEOS

RELATED NEWS

Recommended