இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரு புரோக்கர்கள்!

வாசுதேவன்

UPDATED: May 29, 2023, 1:38:19 PM

வேலூர் மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (28.05.2023-ம் தேதி) மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பேட்டை காங்கிரஸ் ஹவுஸ் ரோட்டில் இருந்து வரும் எஸ்விஎஸ் லாட்ஜில் குடியாத்தம் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் இ.லட்சுமி தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது எஸ்விஎஸ் லாட்ஜின் அறை எண் 305-ல் சந்தேகப்படும்படியாக சங்கர் (33) த/பெ. வெங்கடாசலம், குடியாத்தம் என்பவர் ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தார்.

அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் நந்தகுமார் (24 )த/பெ ஜெயக்குமார், சைன குண்டா, குடியாத்தம் என்பவரிடம் தனக்கு வேலை கேட்டு குடும்ப பணத் தேவைக்காக அணுகிய போது நந்தகுமார் நல்ல வேலை இருக்கிறது என்று ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடச்செய்ததாக வாக்குமூலம் அளித்தார். 

இந்த சம்பவத்திற்கு இந்த லாட்ஜின் உரிமையாளர் முனிரத்தினம் (62 ) த/பெ. துரைசாமி உடந்தையாக இருந்ததாகவும் கூறியதன் பேரில் குடியாத்தம் நகர காவல் நிலைய போலீசார் மேற்கண்டவன்கள் மீது வழக்குப் பதிவு செய்து நந்தகுமார், சங்கர் ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது போன்ற பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended