- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பண்ருட்டி அருகே இரண்டு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்.
பண்ருட்டி அருகே இரண்டு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்.
இடும்பன்
UPDATED: May 20, 2023, 8:01:57 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சுகம் (28 )சுதா( 50) ஜோதி (55 )பானு உட்பட பதினொரு பெண்கள் விவசாயக் கூலி வேலைக்காக ஆட்டோவில் மணப்பாக்கத்தில் இருந்து செம்மேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஷ் (21) ஆட்டோவை ஓட்டினார் எஸ். எரிப்பாளையம் சாலை வளைவில் வந்த போது எதிரே வந்த செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜானகிராமன் (45 )ஹரிஷ் ஓட்டி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதி சாலையோர பள்ளத்தில் விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோ டிரைவர்கள் ஹரிஷ் ஜானகிராம் மற்றும் 11 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை போலீசார் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது, இந்த விபத்து தொடர்பாக இரு ஆட்டோ டிரைவர்கள் மீதும் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஆட்டோ டிரைவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் சரியான வாகன உரிமம் இல்லாமல் அதிகப்படியான பயணிகளை ஏற்றி செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நிகழ்ந்து வருவதாகவும்,
மாவட்ட நிர்வாகம் உடனடி ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.