Author: மாரிமுத்து

Category: மாவட்டச் செய்தி

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மக்களின் நூறாவது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்க வந்த பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு காவல்துறை துப்பாக்கியால் சுட்டு 13 பேர் மரணம் அடைந்தனர்.

இதனை முன்னிட்டு மே 22 ஆம் தேதி ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கத்தின் சார்பில் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கட்டமாக முத்து நகர் கடற்கரையில் வழக்கறிஞர் ஹரி ராகவன் தலைமையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இதனை அடுத்து தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் முத்து நகர் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல தூத்துக்குடி மாநகர் பல்வேறு பகுதிகளில் சுமார் 2300 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மீள விட்டான் பண்டாரம் பட்டி திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ் தூத்துக்குடி டவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவரங்களை கேட்டு அறிந்து வருகிறார்.

காவல்துறை அனுமதி மறுத்த எந்த ஒரு நிகழ்ச்சியும் மாநகரில் நடத்தக்கூடாது என்று காவல்துறை உறுதியாக கூறி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் தூத்துக்குடி மாநகரம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

#Tuticorinnews, #tuticorinnewstoday , #sterlite #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்
Comments & Conversations - 0